செறுப்பை மாற்றுவது போல்
கருப்பையை
மாற்றும் காலத்தில்
காதலுக்கு ஏது மரியாதை
கருப்பையை
மாற்றும் காலத்தில்
காதலுக்கு ஏது மரியாதை
யாரோ ஒருவரின் வேண்டுதல் |
நிறைவேறிய மகிழ்வில் |
ஆலயமணி |
கோவில் திருவிழா |
ஊதிஊதியே பெருத்தது |
பொங்கள் பானை |
பொத்தம் பொதுவாக வரைகிறேன் |
நித்தமும் சிரிக்கிறது |
சுவரொட்டியில் |
ஊர் திருவிழா |
பலிக்கு தயாராகும் |
ஆட்டு மந்தைகள் |
கரையான்புற்று |
பட்டுக் கம்பளத்தில் |
எறும்பின் அலைவரிசை! |
குயிலின் பாடல் |
காற்றில் தலையசைக்கின்றன |
மூங்கில் |
படித்து முடிக்கிறேன் |
கணப்பொழுதில் |
ஊறும் எறும்பு |
திருப்பதி வாசா திருமலை நேசா உன் |
திருமுகம் காணவே கோவிந்த கோசா |
திருப்பதி வாசா திருமலை நேசா உன் |
திருமுகம் காணவே கோவிந்த கோசா |
மலை ஏழும் சூல்ந்து உன்னை மறைத்தாலும் |
மனதாற உனை நினைத்த மறு கணமே |
மலராக நீமலர்ந்து ஒளி தருவாய் கோவிந்த |
விலை ஏதும் கொடுத்து உன்னை நிறைத்தாலும் |
விழி மூடி உனை நினைத்த ஒரு கணமே |
விதியாக நீநடந்து வழி தருவாய் கோவிந்த |
கடங்காரன் நீயென்று இவ்வுலகம் கடிந்தாலும் |
கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தாலே |
கடனில்லா வளம் தந்து காத்திடுவாய் கோவிந்த |
பசியோடு மலை ஏறும் பக்தருக்கு பரந்தாமா |
பசியோடு பத்தும் பறந்தோட |
ருசியோடு நல்அமுது அழிப்பாய் கோவிந்தா |
ஒரு போதும் உனை மறவா திருநாள் |
தினம் வேண்டும் கோவிந்தா |
அருள் தேடும் என் விழிகளுக்கு |
உன் கருணை மழை வேண்டும் கோவிந்தா |
நூலோடு வந்தேன் |
அவள் பூவிழியால் |
என்னை மலையாக |
சூடிக்கொண்டாள் |
உலகெங்கும் |
போராட்டம் |
எதுகை மோனையா |
அவளும் நானும் |
நகரும் |
நாகரீக உலகில் |
நகராமல் இருக்கிறது |
உன் ஞாபகம் |
தேடி விதைக்கவில்லை |
தெருக்களிலே உயர்ந்து நின்றாய் |
பாடித் திரியும் பறவைக்கெல்லாம் |
படுத்துறங்க இடம்கொடுத்தாய் |
ஓடி களைத்த உழவனுக்கு |
நிழல் முத்தம் கொடுத்து நித்திரையை தந்தாய் |
ஆடி பயிர் விதைத்து |
அடைமழைக்கு காத்திருக்க அன்னபூரணியாய் |
இந்த அகிலத்தையே காத்தாயே |
உனக்கு கைமாறு செய்ய |
உறவுக்கோர் மரம் நடுவேன் தாயே |
உன் உள்ளத்தை குளிர்விக்க ! |