தன்முனைக் கவிதைகள் நானிலு - 55

செறுப்பை மாற்றுவது போல்
கருப்பையை
மாற்றும் காலத்தில்
காதலுக்கு ஏது மரியாதை

தன்முனைக் கவிதைகள் நானிலு - 54

ஏழையின் காதல்
பழைய சோறு மாதாரி
தோத்தாலும் செவிச்சாலும்
ஆயுள் கெட்டி

கவிச்சூரியன் மார்ச் - 2018

யாரோ ஒருவரின் வேண்டுதல்
நிறைவேறிய மகிழ்வில்
ஆலயமணி
கோவில் திருவிழா
ஊதிஊதியே பெருத்தது 
பொங்கள் பானை
பொத்தம் பொதுவாக வரைகிறேன்
நித்தமும் சிரிக்கிறது
சுவரொட்டியில்
ஊர் திருவிழா
பலிக்கு தயாராகும்
ஆட்டு மந்தைகள்

கொலுசு மின்னிதழ் - ஏப்ரல் - 2018

கரையான்புற்று
பட்டுக் கம்பளத்தில் 
எறும்பின் அலைவரிசை!
குயிலின் பாடல் 
காற்றில் தலையசைக்கின்றன 
மூங்கில் 
படித்து முடிக்கிறேன்
கணப்பொழுதில்
ஊறும் எறும்பு

திருப்பதி - பாடல் !

Related image

திருப்பதி வாசா திருமலை நேசா உன்
திருமுகம் காணவே கோவிந்த கோசா
திருப்பதி வாசா திருமலை நேசா உன்
திருமுகம் காணவே கோவிந்த கோசா
மலை ஏழும் சூல்ந்து உன்னை மறைத்தாலும்
மனதாற உனை நினைத்த மறு கணமே 
மலராக நீமலர்ந்து ஒளி தருவாய் கோவிந்த
விலை ஏதும் கொடுத்து உன்னை நிறைத்தாலும்
விழி மூடி உனை நினைத்த ஒரு கணமே
விதியாக நீநடந்து வழி தருவாய் கோவிந்த
கடங்காரன் நீயென்று இவ்வுலகம் கடிந்தாலும்
கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தாலே
கடனில்லா வளம் தந்து காத்திடுவாய் கோவிந்த
பசியோடு மலை ஏறும் பக்தருக்கு பரந்தாமா 
பசியோடு பத்தும் பறந்தோட
ருசியோடு நல்அமுது அழிப்பாய் கோவிந்தா 
ஒரு போதும் உனை மறவா திருநாள் 
தினம் வேண்டும் கோவிந்தா
அருள் தேடும் என் விழிகளுக்கு 
உன் கருணை மழை வேண்டும் கோவிந்தா

தன்முனைக் கவிதைகள் நானிலு - 53

நூலோடு வந்தேன் 
அவள் பூவிழியால் 
என்னை மலையாக 
சூடிக்கொண்டாள் 

தன்முனைக் கவிதைகள் நானிலு - 52

உலகெங்கும் 
போராட்டம் 
எதுகை மோனையா 
அவளும் நானும்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 51

நகரும் 
நாகரீக உலகில் 
நகராமல் இருக்கிறது 
உன் ஞாபகம் 

 மரம் வளர்ப்போம் !

Image result for மரத்தின் அவசியம்

தேடி விதைக்கவில்லை 
தெருக்களிலே உயர்ந்து நின்றாய் 
பாடித் திரியும் பறவைக்கெல்லாம் 
படுத்துறங்க இடம்கொடுத்தாய் 
ஓடி களைத்த உழவனுக்கு 
நிழல் முத்தம் கொடுத்து நித்திரையை தந்தாய் 
ஆடி பயிர் விதைத்து 
அடைமழைக்கு காத்திருக்க அன்னபூரணியாய் 
இந்த அகிலத்தையே காத்தாயே 
உனக்கு கைமாறு செய்ய  
உறவுக்கோர் மரம் நடுவேன் தாயே 
உன் உள்ளத்தை குளிர்விக்க !

mhishavideo - 145