புத்தனை போலவே |
தியானத்தில் இருக்கிறது |
நூலகத்தில் புத்தகங்கள் |
ராப்பிச்சை |
ஒளிவீசுகிறது |
தட்டில் நிலா |
ஆடி பெருக்கு |
அடி பம்பிற்கு பூஜை போட்டால் |
அம்மா |
உயர்ந்த வானம் |
தரையிறங்கியதும் விஷமானது |
மண்வாசனை |
கவிச்சூரியன் மின்னிதழ் பிப் 2018
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
உயிர்த்திசை
விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் |
விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே |
படைத்தவன் துணையில் எனை வளர்க்க |
பத்துப்பாத்திரம் துலக்கி கரை சேர்த்தாயே |
உடுத்தும் ஆடை அழகினிலே உன் |
உதிரத்தை மறைத்து வைத்தாயே நான் |
படுத்தும் பாட்டை பொருத்தருளி உன் |
பாதி தூக்கத்தில் அழுது துடித்தாயே |
ஊரார் என்னை கடிந்துகொண்டால் உன் |
உயிர்த்திசை நோக துடித்தாயே இவ் |
உலகத்தில் நானும் வலம் வரவே உன் |
உயிர் மூச்சை பரிசாய் கொடுத்தாயே |
எதை நான் கொடுத்து மீட்டிடுவேன் உன் |
எல்லையில்லா தியாகத்தை என்ற |
எண்ணத்திலே நானும் உயிர் பிழைத்திருக்க உன் |
ஜெனனம் கொடுத்து மகிழ்விப்பாயா |
பாலும் தேனும் கலந்தூட்டி என் |
பாவக் கணக்கை முடித்துக்கொள்ள |
பாவி நானும் துடிக்கின்றேன் உன் |
பார்வை இன்றி தவிக்கின்றேன் தாயே ! |
Labels:
பெண்ணியக் கவிதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கொலுசு - மார்ச் - 2018
பூ போட்டுப் பார்க்கிறேன் |
மண் விழுந்தது |
மூடநம்பிக்கையில் |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கவிச்சூரியன் மின்னிதழ் ஜனவரி -2018
விரிசல் பட்ட நிலத்தில் |
ஊா்ந்து வருகிறது |
எறும்பு படை |
மங்கள வாத்தியம் முழங்க |
உடன் கட்டை ஏறுகிறது |
முதல் காதல் |
மார்கழி பிள்ளையார் |
கையில் கிண்ணத்துடன் |
சிறுவா் கூட்டம் |
இராவணணின் கூட்டில் |
பத்திரமாக இருந்தது |
சீதையின் கற்பு |
நடுகடல் |
சுனாமி அலை |
பாவம் என் மீன்குஞ்சுகள் |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 50
நான் |
உனக்கு மனைவியாக விரும்புகிறேன் |
நீ |
உன் ஜாதிக்கான |
மனைவியை தேடுகிறாய் ! |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
ஊஞ்சலில் அமர்ந்த படியே ஆராரோ ஆரிரரோ பாடும் முதிர் கன்னி !
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...