ஹைக்கூக்கள்

நீட் தேர்விற்காக
ஒத்து ஊதுகிறார்
படிப்பறிவில்லா தலைவர்
கலைகளுக்கு நடுவே
பூத்துக் குலுங்குகிறது
தாத்தா செடி
பூனை குறுக்கே வந்ததும்
புலியாக மாறினார்
மாமியார்
ஒழுகும் குடிசையில்
ஒய்யாரமாய் ஒலிக்கிறது
பறை சத்தம்
உருண்டோடும் உலகம்
வறண்டோடுகிறது
நதிகள்
புயல் வந்ததும்
கரையை கடக்கிறது
தொலைக்காட்சி செய்தி
விளக்கு பூஜை
அணைய தொடங்கியது
மலரின் வாசம்

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145