முத்துக் கமலம் 15 ஜூலை 2017 ல் ஹைக்கூ

காற்றில் 
பேயாகத் திரிகிறது 
உதிரிப்பூக்கள் !
கீழ் வானம் 
மெல்லச் சிவக்கிறது 
தாவணிப்பூக்கள் !
சுருக்கு முடிச்சு போட்டவாரே 
பயணம் செய்கிறாள் 
பூக்காரி !
தண்ணீர் தாகம் 
நாவை அடக்கி வைத்தது 
மூச்சுக் காற்று !
முற்றிய விதையிலிருந்து 
துளிர்க்கிறது 
இளந்தளிர்  !
மழை இல்லை 
குடை பிடித்தபடி 
இளநீர் வியாபாரி 

2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145