ஹைக்கூக்கள் !

இருள் படிந்த கடல் கரை 
வெளிச்சம் பிறக்கிறது...
காதல் ஜோடிகள் ...!
வறுமை கோட்டை 
திருத்திக் கொண்டிருக்கிறது 
எழுதப்பட்ட ஓவியம் ...!
மூங்கில் காடு 
இசைத்துக் கொண்டேயிருக்கிறது
காற்று...!

தீப ஒளி திருநாள் 
பகிரங்க வெடிகுண்டுகள். 
பட்டாசு தொழிற்சாலைகள் ...!
பேசாத பொம்மைகள் 
பேசுகிறது 
வாய்மையை ...!
கூரை காய்ந்து 
மாளிகையானது 
பயிர் வைத்த நிலம் ...!
பாம்பைக் கண்டதும் 
கிளியின் ஆரவாரம் 
உயிர் பெற்றது அணில் ...!
பிரிவின் தூரம் 
நிரப்பி செல்கிறது 
கனவு குதிரை ...!
குறுக்கெழுத்துப் போட்டி 
சரியான விடைக்குப் பரிசு
படிக்காதவன் வெற்றி ...!
சூரியன் மறைந்தது 
மா கோலமிடுகின்றாள்...
நிலவு பெண்!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145