நீயோ நீயோ ...!



மல்லியும் கனகாம்பரமும் 
சேர்ந்து மணக்கையில் 
முகர்ந்து பார்த்து 
கூச்சலிட்டேன் 
முத்தமிட்டது நீயோ என்று
உரசும் மஞ்சள் தான் அரச்சு 
உஷ்ணம் தனை நான் மறக்க 
உச்சி முகர்ந்த அந்த ஒரு கணம் 
வருடிவிட்ட தென்றலாய் 
புல்லரிக்க வைத்தது நீயோ என்று
ஏழு கடல் தாண்டி 
எல்லை மீறாது 
நினைவுகளை தட்டியெழுப்பி 
விட்டு செல்லும் 
செல்போன் சிணுங்களின் மூலம் 
ஏமாற்றி போனது நீயோ என்று
இன்று வரை 
நீயோ நீயோ என்று 
எனக்கான 
ஏக்கங்கள் குறைந்து கொண்டே 
போனாலும்
உனக்கான வாசிப்புகள் 
அதிகரித்துக் கொண்டு 
தான் இருக்கிறது ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145