கூறுவைத்த பூவில் |
கொட்டிக்கிடக்கிறது |
கணக்கில்லா வாசம் ...! |
நாற்காலிக்குள் |
ஓடி ஒளிந்து கொண்டது |
ரத்தம் குடித்த மூட்டை பூச்சி ...! |
கோரைப் புல் |
மினுமினுக்கின்றது... |
பனித்துளிகள் ! |
காலத்தின் விதியை |
எண்ணிக்கொண்டிருக்கும் |
கைரேகை ஜோசியன் ...! |
வர்த்தகத்திலும் வணிகத்திலும் |
கொட்டிக்கிடக்கிறது |
கணித வளம் ...! |
காற்றின் உராய்வில் |
மெய்சிலிர்க்கும் |
போதிமரங்கள் ! |
அடிமரத்திலிருந்து |
எட்டிப் பார்க்கிறது |
ஒரு துளிர் ! |
உடைந்த பாலம் |
ஒப்பனை செய்யும் |
தவளைகள் ! |
கோபுர தரிசனம் கிடைத்தும் |
யாசகம் கேட்கும் |
காம்பறுந்த பூக்கள் ...! |
கூடைக்குள் பழங்கள் |
முகர்ந்து திரும்பும்... |
பறவைகள் ...! |
ரசித்துக்கொண்டிருந்தேன் |
பசுந்தளிரை நசுக்கியபடி |
காட்டெருமை! |
தமிழ் வாசல் - ஜூலை 2016 !
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
சிறப்பான ஹைக்கூக்கள்! பாராட்டுக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅருமை...
ReplyDeleteமிக்க நன்றிகள்
Delete