தகப்பனாட்டம் |
உதவாக்கரையாக |
வளர்ந்து விடாதே |
என்றாள் அம்மா! |
தாத்தாவாட்டம் |
தண்டமாக |
வாழ்ந்து விடாதே |
என்றாள் பாட்டி! |
தாயும் தந்தையும் தவிர்த்துத் |
தாய் மாமனாட்டம் |
சோம்பேறியாக |
இருந்து விடாதே |
என்றார்கள் |
அக்கம் பக்கத்தினர்! |
கடைசி பெஞ்சாட்டம் |
அறிவை இழந்து |
முட்டாளாகி விடாதே |
என்றார் ஆசிரியர்! |
ஆனால் … |
யாருமே சொல்லாமல் |
எனக்குள் எப்படி |
வந்தது இந்த ஈகைத் திறன்? |
ஒருவேளை |
இந்த உலகமே |
நம் |
கைக்குள் இருப்பதற்குப் |
பெயர்தான் |
நட்பின் சுவாசமோ ! |
ஈகை’ என்னுள் வந்ததெப்படி?
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...