ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் !



அழுகியதைக் கண்டு 
அழுவதில்லை 
கண்ணீர் பூக்கள் ..!
காக்கையின் எச்சம்
படிந்திருந்த கல்
பிரதிஷ்டைக்காக நிற்கிறது...!
சிறைசாலை 
சேர்ந்து பயணிக்கும் 
திருடனும் தியாகியும் ..!
கையுறை மீறி 
களவாடியது 
தெற்று நோய் ...!
நிஜமது தெரியாமல் 
நிழலை தேடும் 
வானம் ...!
உச்சி நீதி மண்டையில் 
மாட்டிக் கொண்டது 
மாட்டுப்பொங்கல் ...!
குயவன் கையில் 
சோறு போட்டது 
களிமண் ...!
பாதைகள் பல 
ஒரு வழிப் பயணமாய் 
வறுமை ...!
மனிதர்கள் நடுவில் …    
அசையாமல் இருக்கிறது 
வானம் ...!
நீர்நிலைகளுக்கு 
எமனாக மாறியது 
ஆகாய தாமரை ...!
வியர்வையில் வளர்கிறது 
வறுமையின் விதை ... 
துளிர்க்கும் நிம்மதி...!
ஒளிவு மறைவின்றி 
விற்கப் படுகிறது 
புகை மது ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145