சிறுகதை,



ரோசி தனது பாட்டியின் நினைவு நாளுக்கு பூஜை போட கிராமத்திற்கு செல்கிறாள் 
அங்கு பல வகை இனிப்புகளுடனும்  காரங்களும் சேர்த்து கறி குழம்பு வாசனையும் ஊரையே அழைத்தது தனது சொந்தங்கள் அனைவரும் உண்ட பின் மிஞ்சிய சோற்றை தனது தோட்டத்தில் வேலை செய்கிறவர்களுக்கு கொடுக்க தாத்தா எடுத்து வைத்தார் 
இதைக் கண்ட ரோசி ஏன் தாத்தா அவர்களும் நம்முடன் அமர்ந்து உணவு அருந்தலாமே என்றாள் 
அதற்கு தாத்தா அவர்கள் கொல்லைப்புறமாக தான் வருவது நம்ம ஊர் வழக்கம் இது எல்லாம் உனக்கு புரியாது நீ போய் சாப்பிடு என்றார் 
உடனே தாத்தா எனக்கு ஒரு சந்தேகம் 
கேள் ரோசி 
நம்ம குலுக்கையில் நிரம்பி வழியுதே கடலை அப்புறம் அரிசி மூட்டை பருப்பு மூட்டை காய்கறி மூட்டை இதெல்லாம் நீங்களா விளைய வைத்தீர்கள் இல்லையே ஏன் ?இதையெல்லாம் வியர்வை சிந்தி வெயிலிலும் மழையிலும் கஷ்டப்பட்டு உழைத்து கொடுத்த இந்த ஏழைகளின் இரத்தம் தானே தாத்தா இவைகளை விற்றப் பணத்தை பீரோவில் பூட்டி வைக்கிறீர்கள் இவர்களை மட்டும் பின்புரத்தில் வந்து உணவருந்தச் சொல்கிறீர்கள் இது ஞாயமா தாத்தா 
குழந்தையின் அறிவை கண்டு வாமன கிருஷ்ணன் தான் தன் கண்களை திறந்து வைத்தார் என்று தனது தவறை உணர்ந்து அவர்களை எல்லாம் முன் புறமாக வந்து உணவு அருந்தும்படி மிகவும் அன்போடு அழைத்தார் தாத்தா
ஊர் மக்கள் அவனைவரும் ரோசியை தெய்வமாகவே கொண்டாடினர் அன்றையில் இருந்து அவ்வூர் ஒற்றுமையுடனும் சந்தோசமாகவும் வாழ்த் தொடங்கியது 
குழந்தைகளே ! இந்தக் கதை கூறும் நீதி என்ன இளைய தலைமுறையாகிய நீங்கள் ஜாதி மதம் வேதம் பாராமல் ஒற்றுமையுடன் இருந்தால் போதும் உலகமே உங்களை வியந்து பார்க்கும் என்று தூண்டுதலுக்கு உதவியாக இருந்தது கல்வி 
ஆகவே ஒரு மனிதனை மாற்றும் சக்தி கல்விக்கே உண்டும் என்பது தான் உண்மை  

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145