வல்லரசு பிறக்கட்டும்...!

உச்சி காற்றை தொடும் 
பறவையின் எச்சத்தில் 
பிறக்கும் 
பசுமையை அழிக்கும் 
மனித இனமே ! 
நீ 
கட்சி காற்றை தின்று 
பாமரரின் எச்சில் 
சோற்றில் 
பிறக்கும் வரிதலைமையை 
அழிக்க மறந்ததேனோ ?
சிந்தியுங்கள் ...
நிலைமையை மாற்றுங்கள் 
ஊழல் இல்லா 
வெளிச்சத்தில் 
உலா வரட்டும் நம் 
கிழக்கு சூரியன் !
நிந்தியுங்கள் ...
சமதர்ம சாம்ராஜ்யத்தில் 
சிரித்து மகிழும் 
இரவு காற்றில் உலா வரும் 
ஜாதி மதங்களிடமிருந்து 
சுதந்திரம் பிறக்கட்டும் !
இனிமேலும் வேண்டாம் 
இளைய சமூகமே 
வான் முறை 
துணை கொண்டு 
வன் முறை அழியட்டும் 
வல்லரசு பிறக்கட்டும்...!

1 comment:

  1. நல்ல கவிதை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145