விடுதிப் பூ...!


நான் நிலாவானேன்
உலாவரும் தீபாவளியில்
விடுதிப் பூவாய்

புத்தாடை வாசமில்லை
பலகாரப் பாசமில்லை

வெற்றாடை கோலத்தில்
வெண் மேகத்தை கண்டேன்

அங்கே ...
அழகு பட்டாசுகள்
ஆடை விரித்தன

கோடை வெயில் போல்
கோலமிட்டன

ஜாடைகள் காட்டி என்னை
சமாதானப்படுத்தியது
நச்சதிரங்கள்

ஆஹா இதோ பார்
உன் பெற்றோர்கள்
உலா வருகிறார்கள்
பின் ஏன் கண்களில்
கண்ணீர் துளிகள்

உனைப் போல்
எண்ணற்றத் துளிகள்
இங்கே வண்ணங்கள் கொண்டு
வாழ்கிறது உன் வருகையும்
அதே போல் வளரட்டும்

என் வான் மகளே
இனி உனக்கு
வரும் நாலெல்லாம்
தீபாவளியே !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145