என் மனதோடு மறைந்த முகமே
உன்னை என் நினைவோடு கோர்த்து
நிஜமோடு பேசுகிறேன் அன்பே
நீ என் மனதோடு பேச
வருவாயா ...!
உனதோடு பேசும் வார்த்தைகளை
என் உதட்டோடு பேசுகிறேன் அன்பே
உயிரோடு உறவாட வருவாயா ...!
இருளோடு பேசும் வார்த்தைகளை
என் விழியோடு பேசுகிறேன் அன்பே
கனவோடு கவிபாட வருவாயா ...!
நிலவோடு நிஜமாகும் நம் இரவை
நிழலோடு உறவாடி மலரோடு
மாலை சூடி விடியும் காதலுக்கு
விடைதருவோம் சொர்க்கத்தில் ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...