காதல் தேன்...!


காதல் நாயகனே உன்
கால்தடம் பட்ட
தோட்டத்தில்
வேரூன்றினேன் உன் பெயரை

தினமும் முத்தத்தால்
நீரூற்றி

நினைவின்
யுத்தத்தால் உரம்போட்டு ...

சத்தமின்றி யுத்தம்
செய்யும் இதய துடிப்பை

சொல்லும் விழியின் ஒளியில்
வளரவிட்டேன்
காதல் மலரை

அது என்றோ மலர்ந்தவுடன்
வண்டுகளாய் பறக்கிறேன்

காதல் தேனை உண்பதற்கு
சம்மதிப்பாயா ...?

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145