பெண்ணே உன்னை
கண்ணால் வடித்துப் பார்
உன் முன்னாள் தோன்றும்
கண்ணிற்கு ஒரு பெண்ணாய்
தோன்ற ஆடை கொஞ்சம்
ஆபரணம் கொஞ்சம் போதாதா ?
ஏன் சிலைக்கு பூட்டும்
தங்கத்தை போல் உன்
சிதைக்கு பூட்டி போவதால்
வதைக்கு பெண்கள் நகைக்கு
மயங்க விதைக்கும் விலையாய்
உன்னை கலைக்கு விற்க
சிலையாகிறாயே
ஏன்
உனதாகிய உயிரை மண்ணின்
விதையாக முழைக்க
ஏன் தங்கத்திற்கு இரையானாய்
பெண்ணே விலையை கண்டு
மனதை விலக்கி பார்
அந்த விலையே உன்னை
சிலையாக மாற்றும்
விலையில்லா மண்ணில்
நல்லத் தரமான நிலையில்
அங்கம் ஜொலிக்கும் மங்கையாய்
ஏழை தங்கங்களிலும் ஒரு அங்கம் வகிக்கும் ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...