காதல் தூது...!


காதலின் தூதுவன் யார் ?

பட்ட இதயத்தில் தொட்டு பார்க்கும் 

சிட்டு குருவியாய் உன்னை தட்டி 

எழுப்பும் இதயமா ...?


இல்லை சுட்டும் விழியில் 

கட்டி தழுவும் கனவுகளை 

எட்டி பார்க்கும் எண்ணத்தின் 

கவிதையா ...?


மொழியே இல்ல மௌன 

வரிகளைச் சொல்லத் துடிக்கும் 

இதழ்களின் மழலை மொழிகளா ...!


எதுவாக வேண்டுமானாலும் 

இருக்கலாம் உன் காதல் உன்னை 

வென்றால் அதற்கு ஈடு வேறு ஏது  தூது...!



No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145