சருகு(கள்)




காலத்தின் தண்டனையால் 
காலடி பட்ட சருகுகள்...
ரத்தம் சிந்தாமல் யுத்தம் செய்கிறது 
இன்னொரு பசுமை புரட்சிக்காக...!

வான் மேகம் கண்ணீர் சிந்த 
வறண்ட பூமி துளிர் காண 
புரண்டு புரண்டு புயலாகியது 
புது இன்ப காற்றில்
பொறந்த வீட்டை இழந்த சருகுகள்....

கக்கிய மரங்கள் 
காகிதமாய் பேசும் போது 
மக்கிய இலைகள் உரமாகி 
மரமாக அளவுகள் இல்லை 
இருந்தும் நான் ஒரு அதிசயப் பிறவி...!

காயிந்த சருகில் ஸ்வரமாகிறேன் 
கவிதை வடிவில் உயிர் வாழ்கிறேன் 
முடிந்த பொழுதிலும் 
முன்னேறிச் செல்ல விறகாகிறேன் 
பசியின் உயிராகிறேன்

எறும்புக்கு படகாகி
எதிரிக்கும் நன்மையாகி
காக்கைக்கு வீடாகி
காற்றிலே பறக்கும் 
பட்டத்திற்கு பாடமாகி
பலுனுக்கும் பாதையாகிறேன் 

முட்டாள் தேசத்தில் 
கொட்டாவி விட்டும் 
கெட்டாவி படத்தில் 
சிலிர்க்கும் கொடியாகி
சில்லென்ற காட்டில் குளிர்காயும்
காதலருக்கு தீயாகிறேன் ...

நானாகும் தருணத்தில் 
இறந்த காலமாகிறேன் 
இதயம் உள்ள கடவுளுக்கு 
இலைகலாகிறேன் என்றும் 
இலைகலாகிறேன்...! 


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145