இனி ஒரு பிறவி வேண்டாம் அன்பே
இணைந்துவிடு இன்றே
கனியொரு வண்ணம் தொட்டு
காதல் கொள்வோம் ....
ஜாதியில்லா
சுதந்திரப் பறவையாய்
மதமில்லா
மத்தாப்பூ பூவாய்
அழகை ஆதரிக்கா
அன்பின் ஊடலாய்
பண்பின் தோட்டத்தில்
பருகும் தேனாய்
உலகங்கள் இரண்டானாலும்
உள்ளங்கள் ஒன்றாய்
எண்ணங்கள் தோறும்
ஏறி இறங்கிடிவோம்
வாழ்க்கை ஏணிப்படியில்
வாழும் காதலர்களாய்...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...