சென்ரியுவாய்த் திருக்குறள் 96 to 100

ஹிஷாலியின் திருக்குறள் சென்றியுக்கள் : 

குறள் 96:
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை 
நாடி இனிய சொலின்.

நாட்டில் 
அறநெறி தழைக்க
இன்சொல் பேசுக

தீமை அகற்றி 
நல்வழிகாட்ட 
தேன் சொற்கள் போதும் 

குறள் 97:
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று 
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

உலகத்தாரோடு ஒன்றுவது
பிறருக்கு நன்றி பயக்கும் 
பண் சொல்

குறள் 98:
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் 
இம்மையும் இன்பம் தரும்.

அன்றும் இன்றும் என்றுமே 
புகழுடன் திகழ 
மனுநீதி சோழன் இன்சொல்லே...!

குறள் 99:
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ 
வன்சொல் வழங்கு வது.

கடுஞ்சொல் பேசாதவர் 
வாழ்க்கை 
இன்பம் பெருகும்

குறள் 100:
இனிய உளவாக இன்னாத கூறல் 
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

இன்பமற்ற சொல்லை நாடுபவர்  
கனியை விட்டு 
விஷத்தை உண்பவர் 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145