சென்ரியுவாய்த் திருக்குறள் - 81 to 90

ஹிஷாலியின் திருக்குறள் சென்ரியுக்கள் : 


குறள் 81:
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி 
வேளாண்மை செய்தற் பொருட்டு.
அண்டைவீட்டாரை  அனுசரிப்பதும் 
விருந்தினருக்கு  உதவுதல்
இல்வாழ்க்கையின் அழகு 
குறள் 82:
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா 
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
விருந்தினரை மறைத்து 
உண்ட பண்டம் 
விஷமானது 
குறள் 83:
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை 
பருவந்து பாழ்படுதல் இன்று.
விருந்தினருக்கு உதவினால் 
வறுமை துன்பம் 
குடும்பத்தை நெருங்காது 
குறள் 84:
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து 
நல்விருந்து ஓம்புவான் இல்.
மனமகிழ்ச்சி முகமலர்ச்சி
ஜொலிக்கும் வீட்டில் 
திருமகள் குடி இருப்பாள்.
குறள் 85:
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி 
மிச்சில் மிசைவான் புலம்.
விதை நெல்லை 
விருந்தளிப்பவன் 
சிறந்த பண்பாளன்
குறள் 86:
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் 
நல்வருந்து வானத் தவர்க்கு.
விரும்பாத விருந்தினரை உபசரித்து 
வரும் விருந்தினரை எதிர் பார்ப்பவன் 
கடவுளின் விருந்தினன்!
குறள் 87:
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் 
துணைத்துணை வேள்விப் பயன்.
விருந்தினரின் தகுதிக்குமேல் 
விருந்தளிப்பது 
அளவிட முடியாத நன்மை 
குறள் 88:
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி 
வேள்வி தலைப்படா தார்.
கஷ்டத்தில் சேர்த்த செல்வம் 
தன் இஷ்டத்தில் செலவளிபவன் 
புண்ணியத்தை இழப்பான்...! 
குறள் 89:
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா 
மடமை மடவார்கண் உண்டு.
கோடி செல்வம் இருந்தும் 
கொடைவள்ளல் அற்றவர்  
மூடர் 
குறள் 90:
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து 
நோக்கக் குநழ்யும் விருந்து.
முகம் கோணி
அமிழ்தம் படைத்தால் 
வாடும் அனிச்சப் பூ 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145