ஹிஷாலியின் திருக்குறள் சென்ரியுக்கள் :
குறள் 81: |
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி |
வேளாண்மை செய்தற் பொருட்டு. |
அண்டைவீட்டாரை அனுசரிப்பதும் |
விருந்தினருக்கு உதவுதல் |
இல்வாழ்க்கையின் அழகு |
குறள் 82: |
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா |
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. |
விருந்தினரை மறைத்து |
உண்ட பண்டம் |
விஷமானது |
குறள் 83: |
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை |
பருவந்து பாழ்படுதல் இன்று. |
விருந்தினருக்கு உதவினால் |
வறுமை துன்பம் |
குடும்பத்தை நெருங்காது |
குறள் 84: |
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து |
நல்விருந்து ஓம்புவான் இல். |
மனமகிழ்ச்சி முகமலர்ச்சி |
ஜொலிக்கும் வீட்டில் |
திருமகள் குடி இருப்பாள். |
குறள் 85: |
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி |
மிச்சில் மிசைவான் புலம். |
விதை நெல்லை |
விருந்தளிப்பவன் |
சிறந்த பண்பாளன் |
குறள் 86: |
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் |
நல்வருந்து வானத் தவர்க்கு. |
விரும்பாத விருந்தினரை உபசரித்து |
வரும் விருந்தினரை எதிர் பார்ப்பவன் |
கடவுளின் விருந்தினன்! |
குறள் 87: |
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் |
துணைத்துணை வேள்விப் பயன். |
விருந்தினரின் தகுதிக்குமேல் |
விருந்தளிப்பது |
அளவிட முடியாத நன்மை |
குறள் 88: |
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி |
வேள்வி தலைப்படா தார். |
கஷ்டத்தில் சேர்த்த செல்வம் |
தன் இஷ்டத்தில் செலவளிபவன் |
புண்ணியத்தை இழப்பான்...! |
குறள் 89: |
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா |
மடமை மடவார்கண் உண்டு. |
கோடி செல்வம் இருந்தும் |
கொடைவள்ளல் அற்றவர் |
மூடர் |
குறள் 90: |
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து |
நோக்கக் குநழ்யும் விருந்து. |
முகம் கோணி |
அமிழ்தம் படைத்தால் |
வாடும் அனிச்சப் பூ |
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...