ஹிஷாலீ ஹைக்கூ - 25


கணினிமயம் உலகமயமானதால் 
ஒழிந்துவிடாது 
கை ஓவியம்...!   
கணினி மறந்ததால் 
கல்லின் சிற்பம் 
கடவுளாகிறது..! 
தமிழனின் அறிவுப் பால் 
பேசும் ஓவியம் 
எழுதும் காவியம்...!
வாடிய பயிர்களுக்கு 
வலிகள் தெரிவதில்லை 
வருத்தத்தில் நிலம் 
வானில்  மின்சாரம் 
கூறு போடாத நிலா 
புன்னைகையில் இரவு 
காணி நிலமும் கட்டிடமானால் 
ஊண் உண்ணிகள் 
அழிந்துவிடும்...!
தொகு பகுதி 
மூல காரணி 
பணம்...!
சூரியன் வருகை 
கடலின் 
பிராணாயாமம்...!
மனிதனின் 
உயிர் மருந்து
ஆசனம் சுவாசனம்...! 
பத்துமுறை சுற்றினால் 
களிமண் பானை 
மனிதன் என்றுமே...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145