சென்ரியுவாய்த் திருக்குறள் - 116-120


ஹிஷாலியின் திருக்குறள் சென்றியுக்கள் :

குறள் 116:
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் 
நடுவொரீஇ அல்ல செயின்.
நீதி மறந்து 
அநீதி செய்தால் 
வாழ்க்கை கெடும் 
குறள் 117:
கெடுவாக வையாது உலகம் நடுவாக 
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
நீதியால் கெட்டான்
புகழ்
நிலைத்திருக்கிறது
குறள் 118:
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் 
கோடாமை சான்றோர்க் கணி.
சம நீதியின் 
அளவு கோல் 
தராசு முள் 
குறள் 119:
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா 
உட்கோட்டம் இன்மை பெறின்.
நேர்மை நெஞ்சுறுதி 
கொண்டவரின் சொல் 
கடவுள் வாக்கு 
குறள் 120:
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் 
பிறவும் தமபோல் செயின்.
முதலாளி தொழிலாளி பார 
நேர்மை வாணிகம் 
சிறந்த லாபம் தரும் 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145