சென்ரியுவாய்த் திருக்குறள் - 51 to 60


குறள் 51: 
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
குறைந்த வருவாய் 
நிறைந்த அன்பு 
மனைவியின் கடமை 
பசியிலும் பால்முகம் 
மாறா இல்லறம் 
துணைவியின் நற்பண்பு 
தன் குடும்பம் தாய்வீடு 
பிரிக்கா மனைவி 
வருவாய் தலைவி 
குறள் 52:
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
நற்பண்புள்ள மனைவி 
அமைவது 
தலைவனின் தனிச்சிறப்பு 
மாசற்ற 
இல்வாழ்க்கை 
மனைவியின் பாக்கியம் 
சிறப்பில்லா வாழ்வு
குடும்பத்தின் அழிவு 
குணம் தவறிய மனைவி 
குறள் 53:
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?.
கோடியில் புரண்டாலும் 
குடும்பம் தழைக்க  
மனைவி சீதையாக 
இருப்பது 
இல்லாமல் போக்குவது 
பண்பற்ற மனைவி 
ஆயிரம் சொந்தங்கள் நடுவில் 
தெய்வமாய் வாழ்கிறாள் 
பண்பு குறையா மனைவி 
குறள் 54:
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
வறுமையிலும் 
வாசம் மாற கற்பு 
மண்ணின் பெருமை
பிறப்பில் குறையிருந்தாலும் 
வளர்ப்பில் வானம் தொடுவது 
கற்பின் இலக்கணம்
மாற்றுத்திறநாளி
இல்லா பிறப்பு 
பெண்ணின் கற்பு
குறள் 55:
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
மனைவியின் சொல்
வான் வார்க்கும் 
கணவனை வணங்கினாள்
கணவன் வாக்கு 
கன்னியின் நாக்கு 
இடியுடன் மழை 
ஐயும் பூதங்களும் அடிமை 
மனைவியின் கட்டளைக்கு 
கணவனே தெய்வமானால்  
குறள் 56:
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
கணவனின் புகழ்பெருமையை 
நிலைநாட்டுபவள் 
கற்புநெறி தவாறபெண் 
கற்பில் உள்ளது
பெண்ணின் 
கணவன் உயிர் 
அறத்தின் குலவிளக்கு
உடலும் உள்ளமும் 
கணவனுக்கே அர்ப்பணிப்பவள் 
குறள் 57:
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
அடிமைபடுத்துவது 
அறியாமை 
மானம்காக்கும் மகளிரை 
கற்பின் பயன் 
பண்பால் நிறையும் 
கணவனில்லா பெண் 
சிறைப்பட்ட கற்பு 
சிதைந்துவிடும் 
மன அடக்கமில்லா பெண் 
குறள் 58:
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
காமத்தால் அழியாத 
கணவனின் நற்பண்பு 
பெண்ணின் பெருஞ்சிறப்பு
பெண்ணின் 
இல்வாழ்க்கை சிறக்க   
கணவனின் நற்பண்புகள் 
மனதாலும் உடலாலும் 
கலங்கப்படா பெண்
தேவலோக பெண்ணாவாள் 
குறள் 59:
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
வீதியில் தலை நிமிர்ந்து 
நடப்பதில்லை 
தாசிகள்
கலங்கியது காளை 
கன்னித்தன்மையற்ற 
மனைவியால்  
புகழ் தேடிய மனைவி 
வெக்கத்தில் 
ஆண் சிங்கம் 
குறள் 60:
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
மங்கலப் பண்பாடு 
மாசற்ற குழந்தைகள்   
சிறந்த அணிகலன் 
நல்ல கணவன் மனைவி பிள்ளை
அமைந்த இல்வாழ்க்கை
பண்பாட்டின் அணிகலன் 
அகஅழகில் மனைவி 
புறஅழகில் பிள்ளை 
கணவனின் பேறு

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145