|
குறள் 21: |
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து |
வேண்டும் பனுவல் துணிவு |
ஹிஷாலீ சென்ரியுக்கள்
|
துறவிகள் |
ஆசையில்லா ஒழுக்கம் |
சிறந்த நூல்...! |
|
பிறப்பு நூல் சிறப்பே |
உறுதியான |
ஒழுக்கம்...! |
|
மேன்மக்கள் |
துறவி ஒழுக்கம் |
சரித்திர நூல்...! |
|
குறள் 22: |
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து |
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று |
ஹிஷாலீ சென்ரியுக்கள்
|
நிகரில்லா |
அளவுகோல் |
இறப்பு பற்று...! |
|
பிறப்பு இறப்பு |
கணக்கிடப்படுகிறது |
உத்தமர்கள்...! |
|
குறள் 23: |
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் |
பெருமை பிறங்கிற்று உலகு
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
நன்மை தீமை |
களைவது |
நல்லோர் பண்பு...! |
|
இம்மை |
மறுமை |
துறந்தோர் ஞானி...! |
|
இரண்டில் ஒன்றை |
அறுத்தவர் |
உலகில் நிலைப்பார்...! |
|
தீமையில்லா |
பேரும் புகழும் |
பிறப்பு வீடு...! |
|
குறள் 24: |
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் |
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
துறவற நிலத்தின் |
விதைகள் |
ஐம்பொறிகள்...! |
|
நல் விதைகள் |
நாற்றமற்ற ஆசை |
வீடுபேறு...! |
|
ஐம் புலன்கள் |
உறுதி அங்குசம் |
இறைவனுக்கு சமம்...! |
|
குறள் 25: |
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் |
இந்திரனே சாலுங் கரி
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
அடங்கா ஆசைக்கு |
அடங்குபவர் |
இந்திரன்...! |
|
புலன் வழி |
அறுத்தவன் |
உலகின் கோமான்...! |
|
ஐய்புலன் |
ஒழித்தவன் |
வான்புகழ் மன்னன்...! |
|
குறள் 26: |
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் |
செயற்கரிய செய்கலா தார்.
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
பிச்சைக்காரன் |
இரத்த தானம் |
மேன்மக்கள்...! |
|
பணக்காரனிடம் இல்லை |
ஏழையிடம் உள்ளது |
தான தருமங்கள்...! |
|
இறைவனின் பண்பு |
மகனிடம் |
சிறியோர் பெரியோர்..! |
|
குறள் 27: |
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் |
வகைதெரிவான் கட்டே உலகு.
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
ஐந்தின் சுவை |
மறந்தவன் |
மனித கடவுள்...! |
|
சுவை அறுத்தவன் |
பின்... |
வசப்படும் உலகம்...! |
|
ஆறில் ஐந்தை |
அறுப்பவன் |
அறிவில் உயர்ந்தவன்...! |
|
குறள் 28: |
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து |
மறைமொழி காட்டி விடும்.
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
இம்மை மறுமை |
பேசும் நூல்கள் |
இறவா மக்கள்...! |
|
நிறைமொழி |
மறைமொழி |
அழியா மந்திரம்...! |
|
நாவின் சுத்தம் |
நூலின் வடிவில் |
சான்றோர்கள்...! |
|
குறள் 29: |
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி |
கணமேயும் காத்தல் அரிது.
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
நற்ப்பண்பு |
சிலநொடியில் அழிந்திடும் |
பெரியோர் கோவம்...! |
|
நிலைக்கவில்லை |
பெரியோர் கோவம் |
நீரின் மேல் எழுத்துப் போல்...! |
|
மலை துளி கோவம் |
புன்னகை தாகம் |
பெரியோர்பண்பு...! |
|
குறள் 30: |
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் |
செந்தண்மை பூண்டொழுக லான்.
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
அண்ட உயிர்களுக்கு |
அன்பு செலுத்துபவன் |
அந்தணர்...! |
|
உலகின் |
சரி பாதி |
அந்தணர் அன்பு...! |
|
நிறைவோ குறைவோ |
அறியா அந்தணர் |
அன்பில் உயர்ந்தவர்...! |
|
குறள் 31: |
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு |
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
செல்வம் சிறப்பு |
ஈடில்லை |
நல்லறம்...! |
|
மழை செழிப்பு |
மனிதன் சிறப்பு |
நல் அறவழி....! |
|
சொலவம் சிறப்பு |
இல்லா மனிதன் |
உயிரற்ற பொம்மை...! |
|
குறள் 32: |
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை |
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
கோடிக்கேடு |
ஒரே அறம் |
தீரும் பாவங்கள்...! |
|
அறத்தை மறந்தவன் |
அறிவை இழக்கிறான் |
தீயநிலத்தில்...! |
|
நன்மை விளையும் |
நிலத்தில் |
மேன்மை செழிக்கும்...! |
|
குறள் 33: |
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே |
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
சமத்துவத்தின் |
சந்நிதானம் |
அறம்...! |
|
தீயவருக்கும் |
தேடிப்புரிக |
அறச்செயல்கள்...! |
|
ஜாதிமாதம் பார்க்கா |
நல்லறம் |
நல் மோட்சம்...! |
|
குறள் 34: |
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் |
ஆகுல நீர பிற.
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
வெளுத்த ஆடை |
அழுக்கில்லா மனம் |
ஆடம்பரமில்லா வாழ்க்கை...! |
|
குற்றம் கலைந்தவன் |
சுற்றம் பெருகும் |
அன்பின் வாசல்...! |
|
வேடங்கள் பலவானாலும் |
பாவங்களில்லா மனிதன் |
உலகின் கண்...! |
|
குறள் 35: |
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் |
இழுக்கா இயன்றது அறம்.
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
அறவழிப் பயணம் |
தொடர்கிறது... |
அழுக்கின் நான்கு...! |
|
தீயஆசை பொறாமை |
கோவம் அறுத்தது |
பரிசுத்த ஆன்மா...! |
|
அடுத்தவன் புகழ் |
வாழ்க்கையின் படிக்கட்டு |
நான்கை விலக்கினால்...! |
|
குறள் 36: |
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது |
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
நொடிகள் மறவா |
அறம்... |
இறவாபடிகள்...! |
|
உடலின்றி துணை |
உலகில் |
காலம் கடத்தா அறம்...! |
|
வயதுகள் தேடா நல்லறம் |
வாழ்கையின் |
துணை வரம்...! |
|
குறள் 37: |
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை |
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
இறைவன் பல்லாக்கு |
இதயமும் சென்றது |
அறம் துறந்தார்...! |
|
இன்பம் துன்பம் |
பல்லாக்கில் இல்லை |
அறத்தில் உள்ளது...! |
|
அளவில்லா அறம் |
ஆண்டவன் பல்லாக்கு |
துறந்தார் தீயவழி...! |
|
குறள் 38: |
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் |
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
வாழும் நாள் |
வாழ்க அறம் |
பிறவா கல்...! |
|
கழியா அறம் |
கைமேல் பலன் |
வாழ்க்கை சீர்...! |
|
பிறவிதுறவறம் |
ஈடில்லா நாட்கள் |
திரும்பா கல்...! |
|
குறள் 39: |
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் |
புறத்த புகழும் இல.
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
தூயறம் |
இன்பத்தருணம் |
வாழ்க புகழ்...! |
|
அறத்தின் இன்பம் |
ஆழ்கடல் துன்பம் |
தூய மனது..! |
|
அறத்தை நாடதோர் |
பிறவழி இன்பதுன்பம் |
பேர் அற்றது...! |
|
குறள் 40: |
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு |
உயற்பால தோரும் பழி.
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
சிறார் திறமை |
பெரியோர் புகழ்வது |
உயர்ந்த அறம்...! |
|
புகழ் மறந்து |
அறம் புரிந்தது |
பழியாபுகழ்...! |
|
பழி பாவம் |
தீர்க்கும் மருந்து |
அறனே...! |
|