கன்னி தமிழ்...!

கன்னி தமிழ் ஈன்றெடுத்த 
கண்ணன் ராசா நான் கண்ணன் ராசா 
என் கனவுகள் நினைவாக்க வந்தேன் 
ரோஜா சென்னை வந்தேன் ரோஜா 

எண்ணு தமிழ் கற்றேடுத்த சங்கத் தமிழானே
இதை எண்ணி எண்ணி மறந்த பின்பும் 
புத்தனானே கண்ணன் புத்தனானே

சூரியன் உதிக்க சந்திரன் துடிக்க 
தென்றாலானே மூச்சின் திங்கலானேன் 

வானவில் உதிக்க வெண்ணிலா துடிக்க 
வாழ்க்கை விடியலின் வெள்ளியானேன் 

வேடந்தாங்கலாய் திரிகிறேன் 
வேர்வையை உண்டு மகிழ்கிறேன் 

வெற்றி கொடிகள் நாட்டவே 
வென்று தணிந்து சாகிறேன் 

என் கண்ணீர் சூட்டில் எரிகிறேன் 
நாளைய காலம் என் கையில் என்று 
நண்றியை தேடி அழைக்கிறேன்

வாழும் காலம் வென்றிடுவேன் 
என் வாழ்க்கை கனவை விழித்திடுவேன்
நாளைய சொல் என் பாடம் 
நம்பிக்கை ஒன்றே நம் பாடம் 

இமையமும் இதயமும் ஒண்ணாகும் 
ஈன்றவர் உள்ளம் ஒளியாகும் 
நண்பர்கள் எல்லாம் தூணாகும் 
நாடும் வீடும் எனதாகும் 

அன்பே கடவுள் உயிராகும் அதில் 
ஆசை உயிரே விதையாகும் 
மண்ணில் மறைந்து பயிராகும் நாளைய 
பசியை போக்கும் உணவாகும் 

இதை எண்ணி எண்ணி வாழ்ந்தாலே 
எறும்பும் கூட சிலையாகும் 
இயற்கை சீற்றம் கூட அமைதியாகும்

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145